செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில், சென்னை போக்குவரத்து கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் வரும் 1 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கட்டணம் இன்றி பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
*செப்.1 முதல் பள்ளி, கல்லூரி திறக்கப்பட உள்ள நிலையில் அறிவிப்பு*
*பேருந்து பயண அட்டை வழங்கப்படும் வரை சீருடை, பள்ளி அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம்*
*அரசு ஐடிஐ, பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்*
பள்ளி, அரசுக் கல்லூரி, ஐடிஐ, பாலிடெக்னிக் மாணவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பான அறிவுரைகள் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
😷முகக் கவசம் உயிர்க்கவசம்😷