டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடனான தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 25 நிமிட சந்திப்பு நிறைவு பெற்றுள்ளது. தமிழ்நாட்டு வளர்ச்சித் திட்டங்கள் சம்பந்தமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.
மேலும் முதல்வர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் அதில் கூறியதாவது: இந்தியா முழுவதும் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. பிரதமருடனான சந்திப்பு மன நிறைவுடன் இருந்தது. முதல்-அமைச்சரான பிறகு முதல் முறையாக டெல்லி வந்து இருக்கிறேன். தமிழகத்தின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக பிரதமர் மோடி உறுதி அளித்து இருக்கிறார்.
மேலும், முதல்வர் மு க ஸ்டாலின் குறிப்பிட்டதாவது:
😡 உலகின் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை ஒன்றிய அரசு அமைக்க வேண்டும்
😡திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
😡மேகதாது திட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்.
😡சென்னை ஐகோர்ட்டின் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அங்கீகரிக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்.
😡 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
😢😡 நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம்
🙏 நாடாளுமன்றம்,சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.
🙏 புதிய மின்சார சட்ட்த்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன்.
🙏 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
🙏ஜி.எஸ்.டி. வரியில் தமிழ்நாட்டுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
🙏 குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினேன்.
🙏 செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
🙏 இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கே வழங்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளேன் என கூறினார்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
🙏முக கவசம் உயிர் கவசம்🙏
நிருபர் பாலாஜி