சமையல் -வான்கோழி பிரியாணி

 


வான்கோழி பிரியாணி

வான்கோழி பிரியாணி மிகவும் சுவையாக இருக்கும். 

இப்போது வான்கோழி பிரியாணி எப்படி செய்வதென்றுப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :-

வான்கோழி கறி - 1 கிலோ

வெங்காயம் - 3

தக்காளி - 3 

பச்சை மிளகாய் - 5 

புதினா - 2 கைப்பிடி அளவு

கொத்தமல்லி - 2 கைப்பிடி அளவு

நெய் - 5 டேபிள் ஸ்பு ன்

கறிவேப்பிலை - 1 கொத்து

ஏலக்காய் - 7

கிராம்பு - 7

இஞ்சி பு ண்டு விழுது - 6 டீஸ்பு ன்

தயிர் - 1 கப்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பு ன்

கரம் மசாலா - 3 டேபிள் ஸ்பு ன்

மிளகு தூள் - 3 டீஸ்பு ன்

சோம்பு தூள் - 1 டீஸ்பு ன்

பிரிஞ்சி இலை - 3

பாசுமதி அரிசி - முக்கால் கிலோ 

உப்பு - தேவைக்கேற்ப

முந்திரி பருப்பு - 5

உலர் திராட்சை - 5

பாதாம் பருப்பு - 5

கசகசா - 3 டீஸ்பு ன்

தேங்காய் பால் - 1 கப்

செய்முறை :-

முதலில் இதற்கு தேவையான வான்கோழி இறைச்சி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு பிரியாணி இலை பட்டை ஏலக்காய் கிராம்பு நல்லமிளகு ஒரு டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

இஞ்சி பூண்டை விழுது எடுத்து கொள்ள வேண்டும்.

அரை கப் தயிர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

👉 அரிசியை உப்பு போட்டு வேக வைத்து அரைவேக்காடாக வடித்து கொள்ளவும். நெய்யில் திராட்சை, முந்திரிப்பருப்பை வறுத்து வைக்கவும். பாதாம் பருப்பை ஊற வைத்து தோல் உரித்து கசகசவோடு சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.

👉 வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

👉 கறியில் மஞ்சள் தூள், மிளகு தூள், சோம்பு தூள், உப்பு, தயிர், கரம் மசாலா, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினாவை சேர்த்து பிரட்டி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

👉 குக்கரில் நெய் ஊற்றி சுடானதும் கறிவேப்பிலை, ஏலக்காய், கிராம்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பிரிஞ்சி இலை, சிறிது கொத்தமல்லி, புதினா, இஞ்சி பு ண்டு விழுது மற்றும் தயிர் சேர்த்து தாளிக்கவும். பின் கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கிளறவும். இப்போது மசாலா போட்டு பிரட்டி ஊற வைத்துள்ள கறியை சேர்த்து நன்றாக பிரட்டவும்.

👉 மசாலா கறியினுள் சேர்ந்த பின் அரைத்த பாதாம் விழுது, தேங்காய் பால், சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி பின் தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 20 நிமிடங்கள் வேக விடவும்.

👉 பிறகு கறி வெந்ததும் கறியை தனியே எடுத்து அதே குக்கரில் சாதம் அதன் மேல் கறியின் கிரேவி மீண்டும் சாதம், கிரேவி சேர்த்து அடுக்காக போட்டு அதன் மேல் கொத்தமல்லி தூவி பின் வறுத்த முந்திரி, உலர்ந்த திரட்சை சேர்த்து தூவி குக்கரை மூடி 15 நிமிடம் தம்மில் போடவும். இப்போது சுவையான வான்கோழி பிரியாணி தயார். 


மிகவும் சுவையான மற்றும் சத்தான வான்கோழி பிரியாணி ரெடி. 

நன்றி

கார்த்திகா