இரு வரி செய்திகள்

 


            தென்காசி மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் இரண்டாவது கணவரை கள்ளக்காதலனுடன் கொலை செய்து வீட்டில் தென்னை மரத்திற்கு அடியில் புதைத்த மனைவி .3 வருடங்களுக்குப் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.


👉அரசு, ஊடகத்துறை, காவல்துறை, ரசிகர்களுக்கு நன்றி - விவேக்கின் மனைவி அருள்செல்வி


👉இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 12 நாட்களில் 8%-ல் இருந்து 16.69% ஆக அதிகரிப்பு - மத்திய அரசு


👉ஓசூர் அருகே மூக்கண்டப்பள்ளியில் மாதையன் என்பவர் வீட்டில் 150 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை  -போலீஸ் விசாரணை


👉த‌‌‌மிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு கொரோனா


👉மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரித்தவரை நடிகர் விவேக் தடுப்பூசியால் உயிரிழக்கவில்லை

- சீமான்


👉திருநெல்வேலி மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 47 பேருக்கு கொரோனா உறுதி


👉தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கக்கோரி பிரதமருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்!


👉கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே.1ம் தேதி முதல் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் எண்ணிக்கை குறைப்பு; முன்பதிவு செய்தவர்கள் ஏப்.30 வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அறிவிப்பு


👉கொரோனா பொருளாதார சிக்கலை எதிர்கொள்ள குடும்பத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் - சோனியாகாந்தி வலியுறுத்தல்


👉புதுச்சேரி மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்துகள் போதுமான அளவில் இருப்பு உள்ளது

- துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்