முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி

 


சென்னைமிழகத்தில் நேற்று 168 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதில் 16 ஆயிரத்து 800 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தடுப்பு மருந்து தயாராக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 7 ஆயிரத்து 381 பேருக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும், 194 பேருக்கு ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தும் என மொத்தம் 7 ஆயிரத்து 575 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் இதுவரை 57 ஆயிரத்து 965 பேருக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியும், 1,261 பேருக்கு ‘கோவேக்சின்’ தடுப்பூசி என 59 ஆயிரத்து 226 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.