பெண் விமானிகளே இயக்கும் விமானம் - இந்திய விமான வரலாற்றில் சாதனை

 


இந்திய விமான வரலாற்றில் சாதனை நிகழ்வாக, முழுவதும் பெண் விமானிகளை கொண்டு, சான்பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூருவுக்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்படுகிறது.


இந்த விமானம் நேற்று உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணிக்கு புறப்பட்டது. இது வடதுருவத்தின் மேலே சென்று, அட்லாண்டிக் பாதையில் பயணித்து, உலகின் மற்றொரு முனையான கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 3.45 மணிக்கு வந்து அடைகிறது.

இரண்டு எதிர் எதிர் முனையில் உள்ள சான்பிரான்சிஸ்கோ, பெங்களூரு நகரங்கள் இடையேயான தூரம், 13 ஆயிரத்து 993 கி.மீ. ஆகும். 

இந்த விமான பயணம் குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப் பூரி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ஏர் இந்தியாவின் பெண்கள் சக்தி உலகம் முழுவதும் உயர பறக்கிறது என பெருமிதப்பட்டு உள்ளார்.