S.V.ராமனின் 132 ஆவது பிறந்தநாள் இன்று


ஒளியின் அலைநீள மாற்றத்தை கண்டறிந்த S.V.ராமனின் 132 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 





சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார்.


இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார்.


இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது,.


இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்


சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில், தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராபள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார்.


அவர்களின் 132 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. திருச்சிராப்பள்ளியில் பிறந்து வளர்ந்த இவர் இயற்பியல் துறையில் வியத்தகு சாதனைகளை படைத்தவர். 


பொருளின் ஊடே செல்லும் பொழுது ஏற்படக்கூடிய ஒளியின் அலைநீள மாற்றத்தை இவர் தான் கண்டறிந்தார். எனவே தான் அந்த விளைவுக்கு இராமன் விளைவு என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்புக்காக இவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.


சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்ற இவர், கொல்கத்தா பல்கலைக்கழகம், இந்திய அறிவியல் கழகம் ஆகிய இடங்களில் பணியாற்றியுள்ளார்.


இவர் நோபல் பரிசு மட்டுமல்லாமல், பாரத ரத்னா, லெனின் அமைதி பரிசையும் பெற்றவர். இது மட்டுமல்லாமல் வயலின், மிருதங்கம் போன்ற இசைக்கருவிகளிலும் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.


அதன் பின் தானக்கென இராமன் ஆய்வுகூடம் எனும் இடத்தை நிறுவி அங்கேயே தனது வாழ்நாளின் கடைசி காலத்தையும் கழித்துள்ளார். 7 நவம்பர் 1888 இல் பிறந்த இவர்,


இந்தியாவிலேயே முழுமையாகப் படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.


சந்திரசேகர வெங்கட்ராமன் தந்தையார், இரா. சந்திரசேகர் ஐயர் ஒரு ஆசிரியர். தன் தந்தை விசாகப்பட்டினத்தில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றியதால் வெங்கட்ராமன் அங்கேயே தன் பள்ளி படிப்பை முடித்தார்.


அவர் 1904 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் தன்னுடைய B A பட்டப்படிப்பை சிறப்பு தகுதியுடன் முடித்தார்.


வெங்கட்ராமன் தன் முதுகலை பட்டப்படிப்பை அதே கல்லூரியில் தொடர்ந்தார். 1907 ஆம் ஆண்டு ஜனவரியில் M A பட்டப்படிப்பு தேர்வில் எல்லாப் பாடங்களிலும் சாதனை மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.


1907ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிதித்துறை தேர்வு எழுதி அதில் முதிலிடம் பெற்றார். 1907ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கொல்கத்தாவில் உள்ள கணக்குத் துறை தலைமை அலுவலராக தனது வாழ்க்கையைத் துவங்கினார். 


சி. வி. இராமன் அவர்கள் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார்.


என்றாலும் பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள மருத்துவர் மகேந்திரலால் சர்க்காரால் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் (Indian Association for the Cultivation of Science), ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி (செய்முறை) ஆய்வுகள் நடத்தி வந்தார்.


பின்னர் 1917ல் கொல்கத்தாப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த பாலித் பீட இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார். கொல்கத்தாவிலே 15 ஆண்டுகள் கழித்த பிறகு, இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (Indian Institute of Science) 15 ஆண்டுகள் கழித்தார்.


அதன் பின் அவராகவே நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில் (Raman Research Insitute) இயக்குநராக கடைசி நாட்கள் வரை பணியாற்றி வந்தார். 


இவரின் அறிவியல் கண்டுபிடிப்புகளை பாராட்டி 1929-ம் ஆண்டு ஆங்கிலேய அரசு இவருக்கு சர் பட்டம் வழங்கியது, ஆனால் இவர் தன்னுடைய பெயருக்கு முன் சர் என்ற பட்டத்தை பயன்படுத்த விரும்பவில்லை.


அறிவியலிலும், இயற்பியலிலும் அதிக ஆர்வம் கொண்ட ராமன் தன்னுடைய எண்பத்தி இரண்டாம் வயது வரை தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்தார்.


இவரின் மரணம் தான்  இவரின்  தனது ஆய்வுகளுக்கு ஓய்வை தந்தது. இவரின் பல்வேறு கண்டுபிடிப்புகள் இன்றும் அறிவியல் இயற்பியல் மற்றும் தொழிற்துறை போன்ற பல்வேறு துறைகளில் பயன்பட்டுக் கொண்டு இருக்கிறது. இவ்வுலகில் இயற்பியல் துறை இருக்கும் வரை சர்.சி.வி.ராமன் பெயரும் உச்சரிக்கப்படும் என்பதில் துளியும் ஐயம் இல்லை எனலாம்.


தனது 72 ஆவது வயதில் 21 நவம்பர் 1970 இல் இயற்கை எய்தினார். இவர் மறைந்திருந்தாலும் இயற்பியல் உலகிலும் அறிவியல் கூடங்களிலும் இவரது கண்டுபிடிப்புகளுக்கென தனி மரியாதையும் மதிப்பும் உள்ளது.



இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின்  பயணம் தொடரும்.


வணக்கம் அன்புடன்  மோகனா செல்வராஜ்