சென்னை அணி வெற்றி-கனிமொழி வாழ்த்து


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் துபாயில் 13.10.2020 நடக்கும் 29வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 168 ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணி நிர்ணயித்தது.


டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.


தொடர்ந்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 147 ரன்கள் எடுத்தது.


பின்னர், 168 ரன்கள் இலக்குடன் இறங்கிய ஹைதராபாத் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்து 20 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.


இதனையடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது.


இந்நிலையில், திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டரில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.