ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் எனுமிடத்தில் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்ததாக சாந்து குப்தா என்பவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சிறைக்குச் செல்வதற்கு முன்பாக அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டஅவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியது
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பதாக சாந்து குப்தா கைவிலங்குடன் கொரோனா வார்டில் மது குடிப்பது போன்றும், வகைவகையான உணவு உண்பது போன்றும் கைதி படத்தில் வருவது போல கைவிலங்குடன் கலக்கல் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியது.
இது தொடர்பாக ஜார்கண்ட் முதல்வர் மாவட்ட நிர்வாகத்திடம் புகைப்படத்தின் உண்மை தன்மையை அறியுமாறு கேட்டுக் கொண்டிருந்தார். இதன்படி சாந்து குப்தாவின் புகைப்படம் உண்மை என நிரூபிக்கப்பட்டது. இது குறித்து தாற்பொழுது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.