பாடகர் எஸ்.பி.பி விரைவில் மீண்டு வர வேண்டும் என இளையராஜா ஒரு வீடியோ பதிவில் உருக்கமாக பேசியுள்ளார். 'பாலு நீ சீக்கிரம் வா' என அவர் பேசும் உருக்கமான வார்த்தைகள் ரசிகர்களை கலங்க வைத்துள்ளது.
திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை சூளைமேடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில்குணமடைந்து மீண்டு வர திரையுலகினர் மட்டுமின்றி பலரும் தங்களது பிரார்த்தனைகளை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இசைஞானி இளையராஜா தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், எஸ் பி பாலசுப்ரமணியம் விரைவில் மீண்டு வர உருக்கமாக பேசியுள்ளார். 'பாலு நீ சீக்கிரம் வா' என அவர் பேசும் உருக்கமான வார்த்தைகள் ரசிகர்களை கலங்க வைத்துள்ளது. 'நம்முடன் சண்டை இருந்தாலும் சண்டை இல்லாவிட்டாலும் நமது நட்பு தொடரும்.' என இளையராஜா உருக்கமாக பேசியுள்ளார்
எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டறிந்தேன். அவர் விரைந்து குணமடைய விரும்புகிறேன். - அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்.
இந்நிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.
அதில், 'எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டறிந்தேன். அவர் விரைந்து குணமடைய விரும்புகிறேன்' பதிவிட்டுள்ளார்.