சென்னையில் காவல்துறை நடத்திய 12 நாட்கள் தொடர் வேட்டையில் கஞ்சா விற்பனை செய்த 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 174.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 கார், 2 ஆட்டோ, இருசக்கர வாகனம், ரூ.20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவில்பட்டி கிளை சிறையில் சிபிஐ அதிகாரி வி.கே.சுக்லா தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் சிறையில் இருந்த போது உடனிருந்த கைதிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.