தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத் திருவிழா! -முதல்முறையாக மக்கள் பங்கேற்பின்றி கொடியேற்றம்
கொரோனா ஊரடங்கின் காரணமாக, இந்த ஆண்டு கொடி பவனி, திருவிருந்துவிழா, நற்கருணை பவனி, சப்பர பவனி நடைபெறாது என்றும், பெருவிழாவின் இதர வழிபாடுகள் பேராலயத்தின் உள்ளே மக்கள் பங்கேற்பின்றி நடைபெறும் என்றும், மேலும் அவை அனைத்தும் தொலைக்காட்சியிலும், யுடியூப்பிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று பனிமயமாதா ஆலய கொடியேற்ற நிகழ்ச்சி டி.வி.க்களிலும், யு டியூப்பிலும் ஒளிபரப்பட்டது.
தூத்துக்குடி பனிமயமாதா திருவிழாவில் வெளிநாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக சம்பிரதாயத்திற்கு கூட உள்ளூர் இறைமக்கள் கலந்து கொள்ளாதது, கிறிஸ்தவர்கள் மத்தியில் மனவேதனையை ஏற்படுத்தியது.
கந்தசஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நபிகள் நாயகம் குறித்து ஆபாசமாக விமர்சித்த கோபால் என்பவன் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை