மெட்ரோ ரயிலை இயக்க தயார்


இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது.


இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது.


இதற்கிடையே, கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச்  24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


திரையரங்குகள்,  பொழுதுபோக்குப் பகுதிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ரயில் மற்றும் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், ஊரடங்கிற்குப் பிறகு மெட்ரோ ரயிலை இயக்க தயார் என சென்னை மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


பயணிகள் சென்ற பின் மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகளை கிருமிநாசினியால் சுத்தம் செய்ய ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.


பாதுகாப்பான முறையில் மீண்டும் மெட்ரோ ரயிலை இயக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.


இதற்காக, ரயில் நிலையம், மின்தூக்கிகள், ரயில்பெட்டிகளில் தூய்மை பணிகள்  தொடங்கப்பட்டுள்ளது.