ரயில்வேயை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து பிரதமர் மோடிக்கு திமுக எம்பி டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். 151 பயணிகள் ரயில்களை இயக்க தனியாருக்கு அழைப்பு விடுத்து ஜூலை 1-ல் ரயில்வே அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு இருந்தது.
எனவே ரயில் சேவையை தனியார் மயமாக்கமாட்டோம் என்ற உறுதி மொழியை மத்திய அரசு மீறிவிட்டது என திமுக எம்பி டி.ஆர்.பாலு பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை 1ல் வெளியிட்ட அறிவிக்கையை திரும்ப பெறுமாறு ஸ்டாலின் சார்பில் டி.ஆர்.பாலு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை சம்பவத்தில் கைதானவர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வன்மையான கொலைசம்பவம் தொடர்பாக கைதான ராஜா என்பவர் மீது, போக்சோ, கொலை உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 11 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் செங்கல்பட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107-ஆக அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் புதிதாக 100 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
கொடைக்கானலில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஜூலை 6-ம் தேதி முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஜூலை 31-ம் தேதி வரை சர்வதேச விமான சேவைக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா பாதுகாப்பு அதிகரிப்பால் சர்வதேச பயணிகள் விமானப்போக்குவரத்து ஜூலை 15 வரை நிறுத்தி வைக்கப்படுவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஏற்கனவே அறிவித்தது.