அமைச்சர் மனைவிக்கு கொரோனா


கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


உலகையே  ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது.


கொரோனா வைரஸால் இந்தியாவில்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,315-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  


சென்னை மதுராங்கத்தில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதனைத்தொடர்ந்து, கொரோனா பதித்த 8 பேரும் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


 



கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.


தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம், விருதுநகா், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூா், நீலகிரி, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.


ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.325 கோடி வீதம் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கும் மொத்தம் ரூ.3,575 கோடி செலவிடப்பட உள்ளது.


இதில் மத்திய அரசு தனது பங்களிப்பாக 60 சதவிகித நிதியையும், மாநில அரசு 40 சதவிகித நிதியையும் செலவிட உள்ளது. இதுவரை 8 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார்.



கொரோனாவும் எல்லை மீறி தமிழகத்தில் சுழன்று அடிப்பதால், அதை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் தமிழக அரசு திகைத்து நிற்கிறது.


தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது.


சென்னை கட்டுக்குள் வரவில்லை; இரண்டாம் கட்ட நகரங்களில் அதிகரிக்கும் பாதிப்பு, கிராமங்களில் கொரோனா நோயாளிகள் கணிசமாக உயர்வது, மருத்துவ வசதிகள் குறைவாக இருக்கும் நிலையில் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தால் பலி எண்ணிக்கையும் பல மடங்கு உயர வாய்ப்பு உள்ளது.


இன்னும் சில வாரங்களுக்குள் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் கடும் பாதிப்பை சந்திக்கும் நிலை வெகுதூரத்தில் இல்லை.


இது ஒருபுறமிருக்க தமிழகத்தில் ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் சிதைந்து கொண்டிருக்கிறது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதோடு, மக்கள் வாழ்வாதாரம் பேணும் திட்டங்களை அறிவித்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது.


மக்கள் மத்தியில் மார்ச் மாதம் தொடங்கிய மந்தநிலை தொடர்ந்து நீடிக்கிறது. இயல்பு நிலை எப்போது வரும் என்ற ஏக்கத்தில் பொதுமக்கள் காத்திருக்கின்றன