சென்னையில் கொரோனா பாதிப்பின் தீவிரம் நாளுக்கு நாள் புதிய உச்சத்ததை எட்டிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழக சுகாதாரத்துறையின் செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் அதிரடியாக மாற்றப்பட்டிருக்கிறார்.
கொரோனா தொடங்கியதில்- இருந்து தினமும் தொலைக்காட்சியில் தோன்றி செய்தியாளர்களைச் சந்தித்து மருத்துவ அறிக்கையை வெளியிட்டு மீடியா வெளிச்சத்தைப் பெற்றவர் பீலா ராஜேஷ். ஒரு கட்டத்தில் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்திப்பது நிறுத்தப்பட்டது. மருத்துவ அறிக்கைகள் மட்டும் வெளியிடப்பட்டன. சில நாட்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
தலைநகரில் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு மாநகராட்சியின் நிர்வாகக் குளறுபடிதான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்பட்டதாகக எழுந்த குற்றச்சாட்டுகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த பீலா ராஜேஷ், உயிரிழப்புகள் குறித்து ஆய்வு நடத்த சிறப்புக்குழு அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இந்தச் சூழலில்தான் பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்த நபர் பற்றிய மருத்துவ விவரங்களை தமிழக சுகாதாரத்துறைக்குத் தெரிவிக்கவில்லை என்று புகாரும் விஸ்வரூபம் எடுத்தது. ஆனால், மருத்துவமனை தரப்பில் மாநகராட்சியிடம் தகவல் தெரிவித்து விட்டதாகக் கூறப்பட்டது. தமிழக சுகாதாரத்துறைக்கும், மாநகராட்சிக்கும் இடையே நிலவும் பனிப்போரின் வெளிப்பாடு எனக்கூறும் மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன், அடுத்த கட்டமாக மாநகராட்சி ஆணையரையும் மாற்ற வேண்டும் என கூறியிருக்கிறார்.
பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணியில் பீலா ராஜேஷ் தலைமையில் சுகாதாரத்துறை சிறப்பாகச் செயல்பட்டதாக நோய்தொற்று நிபுணரும், தமிழக மருத்துவக்குழுவில் இடம்பெற்றுள்ளவருமான பிரப்தீப் கவுர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். குறிப்பிட்டுள்ளார்.