மருந்து பொருட்கள் பெயரில் போதை மாத்திரை

 



ஜெர்மன் நாட்டிலிருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தில் கூரியர் பார்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் ஆய்வு செய்தனர்.


அந்த பார்சல்களில் ஒரு பார்சல் ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட் நகரிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்திருந்தது.


பார்சலில் மருத்துவ பொருட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சுங்கத்துறையினர் சந்தேகத்தின் பேரில், அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது மஞ்சள், சிவப்பு, வெள்ளை நிறங்களில் 100 மாத்திரைகள் இருந்தன.


அவைகளை ஆய்வு செய்தபோது, அனைத்தும் மெத்தொகட்டமின் என்ற போதை மாத்திரைகள் என தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.



 


தேவாலயம் கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் துப்பாக்கி காட்டி மிரட்டிய பாரதியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளிக்குடி அருகே எஸ்.பி.நத்தத்தில் தேவாலயம் கட்டுவது தொடர்பாக இரு பாதிரியார்கள் இடையே தகராறு ஏற்பட்டது.



காதலித்து ஏமாற்றியதை இளம்பெண் தட்டிக்கேட்டதால் நெருக்கமாக இருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிய காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.