செய்தி துளிகள்
கொரோனாவால் உயிரிழந்தவர்களை விட, பொருளாதார வீழ்ச்சியால் வாழ்வாதாரம் இழந்தவர்களே அதிகம் எனவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட, அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையே அதிகம் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தொழில் முனைவோர் மற்றும் தொழில் அதிபர்களே வாருங்கள், பல வீடுகளுக்கு நம்பிக்கை வெளிச்சமாக அமைவோம் என்றும், இளைஞர்கள் இணைந்து உழைத்தால் பல குடும்பங்கள் அச்சமின்றி வாழ உதவலாம் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
************
ஜெ.அன்பழகன் மரணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வேண்டுகோள்!
**************
கொரோனா பரவல் எதிரொலி: ஒருவாரத்திற்கு எல்லைகளை மூடியது ராஜஸ்தான் அரசு!இன்று ஒரே நாளில் அங்கு 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஜஸ்தான் மாநிலத்தின் அனைத்து எல்லைகளையும் இன்று முதல் ஒரு வாரத்திற்கு மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் வெளிமாநில போக்குவரத்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.