சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் பலியாகியுள்ளனர்.
ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் ஓய்வு பெற்ற உதவி காவல் ஆயவாளர் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர்கள் 3 பேர் மரணமடைந்துள்ளனர்.
சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 30 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நேற்று ஒரேநாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு முழு கடைகளை அடைக்க வணிகர்கள் முன்வந்துள்ளனர்.
___________________
புதுச்சேரியில் புதிதாக 42 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.