மாநிலச் செய்திகள்
தமிழக அரசு அறிவிப்பு :
மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தமிழகம் வருவோருக்கு விமான நிலையத்தில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பிப்பு :
வேளாண் விலை பொருட்களை விற்கும்போது, விற்பனை கட்டணம் வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.
விலையில்லா முகக்கவசம் :
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா முகக்கவசம் வழங்க பரிசீலித்து வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு அறிவிப்பு :
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.