புலம்பெயர்ந்த தொழிலாளர்


ஊரடங்கு அமலுக்கு வந்து 2 மாதங்கள் முடிந்த பின்னரும் புலம்பெயர் தொழிலாளர்களின் துயரம் தொடர்கிறது. இன்னும் லட்சக்கணக்கானோர் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் பல்வேறு மாநிலங்களில் தவித்து வருகின்றனர். அவர்கள் சொந்த ஊர் திரும்ப அரசு மட்டுமல்லாமல் தனி நபர்களும், தன்னார்வ அமைப்புகளும் உதவி வருகின்றன.


முதலில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஒரு ரயிலை ஏற்பாடு செய்ய நினைத்த அமிதாப் பச்சன், பின்னர் தொழில்நுட்ப காரணங்களுக்காக விமானங்களைத் தேர்ந்தெடுத்ததாக தெரிகிறது.  


புலம்பெயர் தொழிலாளர்களுக்கு செய்யப்படும் உதவிகளை விளம்பரப்படுத்தக் கூடாது என்று அமிதாப் வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.  


இந்நிலையில் தற்போது ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்களை மும்பையில் இருந்து அலகாபாத், வாரணாசி, கோரக்பூர் ஆகிய இடங்களுக்கு 6 விமானங்களில் அனுப்பி வைக்க அமிதாப் ஏற்பாடு செய்துள்ளார்


நடிகர் சோனு சூட்டைப் போல், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து உதவி வருவது குறிப்பிடத்தக்கது.