தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா பின்னையூர் கிராமத்தை சேர்ந்தவர் 26 வயது இளைஞரான அய்யப்பன். இவர் நேற்று நள்ளிரவு பின்னையூர் அரசு பள்ளி கட்டடத்திற்கு அருகே உள்ள ஆற்றங்கரையில் செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது கட்டப்பட்டுக் கொண்டிருந்த புதிய கட்டிடத்தின் கம்பி அய்யப்பனின் வயிற்றுப் பகுதியில் குத்தி மறுபுறம் வந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் அய்யப்பன் அலறி உள்ளார்.
அங்கே வந்த சிலரால் வயிற்றில் குத்திய கம்பியின் ஒரு பகுதியை மட்டுமே வெட்டி எடுக்க முடிந்தது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அய்யப்பனை தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கே உயிருக்குப் போராடிய அய்யப்பனுக்கு தீவிர சிகிச்சையளித்த மருத்துவர்கள் இரும்புக் கம்பியை அகற்றினர்.
இந்த சம்பவம் குறித்து ஒரத்தநாடு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் அரசு பள்ளி கட்டிடம் கட்டும் போது அதன் ஒப்பந்தகாரர் தேவையான பாதுகாப்பு வேலி அமைக்காததால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தஞ்சாவூரில் இரும்புக் கம்பி குத்தி உயிருக்குப் போராடிய இளைஞரை அறுவை சிகிச்சை மூலம் அரசு மருத்துவர்கள் காப்பாற்றினர்.