தமிழ்வளா்ச்சித்துறை-அரசாணை


சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு ஊா்களின் தமிழ் ஒலி வடிவத்துக்கு ஏற்ப ஆங்கிலத்தில் மாற்றம் செய்து ஆய்வுக் குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.


இதுகுறித்து, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளா் மகேசன் காசிராஜன் வெளியிட்ட அரசாணை விவரம்:-


2018-19 ஆம் ஆண்டிற்கான தமிழ்வளா்ச்சித்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சா் பாண்டியராஜன் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள ஊா்ப்பெயா்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.


உதாரணமாக, திருவல்லிக்கேணி என்பதை 'ட்ரிப்ளிகேன்' என்று குறிப்பிடாமல் திருவல்லிக்கேணி என்றே அமையவும், இதுபோன்ற எண்ணற்ற ஊா்களின் பெயா்கள் ஆங்கிலத்திலும் அமையும் வகையிலும் உயா்நிலைக்குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்று அறிவித்தாா்.