கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியுள்ளன. இதற்கிடையில், மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டில் வரும் கல்வியாண்டில் ஆறு பாடங்களுக்கு 600 மதிப்பெண்களுக்குப் பதில் ஐந்து பாடங்கள் என்று 500 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் என்று அரசு அறிவித்தது.
மாணவர்கள் ஆங்கிலம், தமிழ், கணிதம், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களையும் கணிதம் தவிர்த்து ஆங்கிலம், தமிழ், உயிர் அறிவியல், வேதியியல் இயற்பியல் ஆகிய பாடங்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் அரசு அறிவித்துள்ள புதிய பாடத்தொகுப்பிற்கு தனியார் பள்ளிகள் அனுமதி வாங்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
அதனை மீறி மே மற்றும் ஜூன் மாதங்களில் மாணவர் சேர்க்கையினை நடத்திவிட்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் புதிய படத்தொகுப்பிற்கு அனுமதி கேட்ககூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.