வயநாட்டில் மீண்டும் ராகுல் காந்தி

 


        *ராகுல் காந்தி மீண்டும் வயநாட்டில் போட்டி*

*நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது.*

*முதல்கட்டமாக 39 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ராகுல் காந்தி மீண்டும் கேரளாவின் வயநாடு தொகுதியில் களமிறங்கவுள்ளார்.

*திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூரும், பெங்களூரு புறநகர் தொகுதியில் டி.கே.சுரேஷும் போட்டியிடவுள்ளனர்.*

*இந்த 39 பேர் பட்டியலில் 24 தலித் வேட்பாளர்கள் இடம்பிடித்துள்ளனர்.*

+++++++++++++++++++++++++++++++++

  


 

    *கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் வேறு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது :

*சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!*


*👉சென்னை:கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் வேறு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.*

*செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்தவர் ஆராமுதன். இவர் மீது மர்ம கும்பல் நாட்டு வெடி குண்டு வீசி சமீபத்தில் தாக்குதல் நடத்தியது. அதோடு அரிவாளால் வெட்டியது.*

 *இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் காஞ்சிபுரம், திருப்பூரைச் சேர்ந்த 5 பேர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.*

*இந்த சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தான் சாரணடைய வேண்டும். வேறொரு நீதிமன்றத்தில் சரணடைய முடியாது.*

*இந்த சம்பவத்தில் சத்தியமங்கலம் மாஜிஸ்திரேட், சரணடைந்ததை ஏற்றிருக்க கூடாது, அது போன்ற நடைமுறையை ஊக்குவித்திருக்க கூடாது.*

*இதுபோல் சரணடைவதால் வழக்கு விசாரணை பாதிக்கும். உண்மையான குற்றவாளிகள் சரணடையாமல் போலியான நபர்களை சரணடைய வைப்பார்கள். எனவே, சத்தியமங்கலம் நீதிமன்றம் குற்றவாளிகள் சரணடைந்ததை ஏற்றுக்கொண்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி அது தொடர்பான மனுவையும் தாக்கல் செய்தார்.*

*இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னாவின் முறையீட்டை ஏற்று கொண்டு, கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் வேறு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது என்று அறிவித்தார்.*

 *மேலும் அவர் பிறப்பித்த உத்தரவில், “தேடப்படும் குற்றவாளிகள் கொலை சம்பவம் நடந்த, அந்த எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தில்தான் சரணடைய வேண்டும், சம்பந்தப்பட்ட எல்லைக்கு உட்படாத மாஜிஸ்திரேட் முன்பு தாக்கல் செய்யப்படும் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. ஒருவேளை சரணடைந்தால் குறிப்பிட்ட மாஜிஸ்திரேட் தனது எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்க வேண்டும்.*

*வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப உத்தரவிடுகிறோம், “இவ்வாறு தெரிவித்தார்.*