48வது வட்டப்பகுதியில் சமூக ஆர்வலர்களால் நிவாரண டோக்கன் வழங்கப்பட்டது

 


        தமிழக அரசு   சார்பில் வெள்ள நிவாரண நிதி டோக்கன் வழங்கப் பட்டன வடசென்னை மாவட்டம் 48 வது வட்டம் நல்லப்ப வாத்தியார் தெரு, ஆண்டியப்பன் தெரு, வள்ளுவன் தெரு, தெலுங்கு செட்டி தெரு வில் உள்ள புயல் மழையால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகிய பொது மக்கள் குடும்ப அட்டை தாரர்களுக்கு நிவாரண தொகை ரூ ஆறாயிரத்திற்கான டோக்கன் சுமார் 575 குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்பட்டது.


 

    இதை முன்னின்று மிகவும் சிறப்பாக ஆர்மி M.ஜெயக்குமார் சமூக சேவகர் பொது மக்களுக்கு வழங்கினார் அவருடன் பிரபு , மணி, வீரா, ராஜி ஆகியோர் ஒத்துழைப்புடன் கொட்டும் மழையிலும் அமைதியான முறையில் டோக்கன் வழங்கியதை பொது மக்கள் பாராட்டி மகிழ்ச்சியுடன் சென்றனர்.


செய்தியாளர் பாலாஜி 


🌏.உண்மை செய்திகள்..🌏