உருவத்தை மாற்றி காட்சியளிக்கும் முருகன்

 


       🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏

தினம் ஒரு திருத்தலம்.. தினமும் பாலாபிஷேகம்🌻.. உருவத்தை மாற்றி காட்சியளிக்கும் முருகன்🦚..!!

அருள்மிகு எட்டுக்குடி முருகன் திருக்கோயில்...!!


🦚 தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு எட்டுக்குடி முருகன் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...

இந்த கோயில் எங்கு உள்ளது?

🦚 அருள்மிகு எட்டுக்குடி முருகன் திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள எட்டுக்குடி என்கிற ஊரில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

🦚 நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி சாலையில் சீராவட்டம் பாலம் என்ற இடத்தில் இறங்கி எட்டுக்குடி செல்லும் பாதையில் சுமார் 2 கி.மீ சென்றால் இத்தலத்தை அடையலாம்.


இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

🦚 இந்த எட்டுக்குடி முருகன் கோயிலின் சிறப்பு என்னவென்றால் பக்தர்கள் பார்க்கும் மனநிலைக்கு ஏற்ப தன் உருவத்தை மாற்றிக்கொண்டு காட்சி தருபவர் எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி.

🦚 குழந்தையாக நினைத்து பார்த்தால் குழந்தை வடிவிலும், இளைஞனாக நினைத்து பார்த்தால் இளைஞர் வடிவிலும், முதியவராக நினைத்து பார்த்தால் வயோதிக வடிவிலும் காட்சி தருகிறார்.

🦚 எட்டுக்குடி முருகன் தலத்தில் சஷ்டி விரதத்தையும், கௌரி விரதத்தையும் ஒன்றாக கடைபிடிப்பது சிறப்பு. தீபாவளியன்று கொண்டாடப்படும் கேதார கௌரி விரதம் தோன்றிய தலம் இதுதான்.


🦚 இங்குள்ள முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மயில்மீது அமர்ந்து காட்சி தருகிறார்.

வேறென்ன சிறப்பு?

🦚 எல்லா முருகன் கோயில்களிலும் இருப்பது போல் இங்கும் காவடி எடுப்பது மிகவும் சிறப்பு.

🦚 எட்டுக்குடி கோயிலில் முருகன் அமர்ந்துள்ள மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே.

🦚 இங்கு முருகன் உக்கிரமாக இருப்பதால் அவரின் கோபத்தை தணிக்கும் வகையில் தினந்தோறும் பாலாபிஷேகம் செய்யப்படுகிறது.

🦚 இக்கோயிலின் முன்புள்ள சரவணப்பொய்கை தீர்த்தத்தில் கைபட்டாலே பாவம் நிவர்த்தியாகிவிடும் என்பது சிறப்பிற்குரியதாகும்.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

🦚 சித்ரா பௌர்ணமி திருவிழா இங்கு பத்து நாட்கள் நடக்கும். பௌர்ணமி நாளுக்கு முந்தைய நாளே நடை திறக்கப்பட்டு பாலாபிஷேகம் துவங்கும். இவ்விழாவில் குறைந்தபட்சம் 23 ஆயிரம் பால்காவடிகள் வந்து சேரும்.

🦚 ஐப்பசியில் கந்த சஷ்டி விழா ஆறு நாட்களும், வைகாசி விசாகம் ஒரு நாளும் நடத்தப்படும். உள்ளிருக்கும் அம்மையப்பனுக்கு மார்கழி திருவாதிரையில் விழா எடுக்கப்படும்.

இது தவிர மாத கார்த்திகையில் சிறப்பு பூஜை உண்டு. இங்கு சத்ரு சம்ஹார திரிசதை எனும் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

🦚 குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்கவும், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனை பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

🦚 இத்தலத்தில் வேண்டுதல்கள் நிறைவேறியதும் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.


             🙏ஓம் சரவணபவ🙏

பக்தியுடன்

மோகனா  செல்வராஜ்

 

    🌏----உண்மை செய்திகள்----🌏