குடியரசு தலைவர் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் உரை ...

 


      குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்.


🌷இன்று தன்னம்பிக்கையில் உயர்ந்து நிற்கிறது இந்தியா; உலகமே இந்தியாவை எதிர்நோக்கி உள்ளது-குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை.

🌷ஏழை மக்கள் முன்னேற்றத்துக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது; நாட்டின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.

🌷உலகின் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை இந்தியா வழங்கி வருகிறது; தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது.



🌷ஜல்ஜீவன் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் பெரும்பான்மையான மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.

இன்று நாட்டில் உறுதியான, அச்சமற்ற தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ளும் அரசு ஆட்சியில் உள்ளது.

🌷சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது முதல் முத்தலாக் தடைச் சட்டம் வரை பல விஷயங்களில் அரசு தீர்க்கமான முடிவை எடுத்து இருக்கிறது: நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் முர்மு உரை

🌷ஒற்றுமையின் வெளிப்பாடு காசி தமிழ்ச் சங்கமம் - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

🌷உலகின் மிகப்பெரிய மின்சார ரயில் நெட்வொர்க் என்ற நிலைக்கு  இந்திய ரயில்வே வேகமாக முன்னேறி வருகிறது

முறைகேடு என்பது நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். ஊழலை ஒழிப்பதற்காக பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது: நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் முர்மு உரை

🌷கொரோனாவை இந்தியா கையாண்ட விதத்தை பார்த்து உலகமே பாராட்டியது : நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உரை.



🙏இந்தியாவையும், குடிமக்களையும் முதன்மையாக வைத்து நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்; 

இது நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இருக்கும்

 🍁பிரதமர் நரேந்திர மோடி

செய்தியாளர் பானு