ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆய்வகம் திறப்பு அமைச்சர் மா. சுப்பிரமணியம்

 


    சென்னை :இராயபுரம் தொகுதியில் உள்ள “அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை”ல் தேசிய ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை தினம் முன்னிட்டு உடலியல் மறுவாழ்வு, கை,கால் இழந்த நபர்களுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயற்கை கை,கால் வழங்குதல், இதயவியல் கண்காட்சி பார்வையிடல், திறன் ஆய்வகம் திறப்பு, மற்றும் புணரமைக்கப்பட்ட கருத்தரங்கக்கூடம் திறப்பு 



    இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியம், சென்னை மாநகராட்சி திருமதி. பிரியா ராஜன், இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் இரா.மூர்த்தி, 



    மாவட்டப் பொறுப்பாளர் தா.இளையஅருணா எம்.சி., மண்டலக்குழு தலைவர் திரு.பி.ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர் திருமதி. கீதா சுரேஷ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலர் திரு.ப.செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குநர் மரு.நாராயணபாபு, ஆகியோர்கள் கலந்துக் கொண்டு சிறப்புறையாற்றினர். உடன் மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவர்கள் கழக உடன் பிறப்புக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.


செய்தியாளர் பாலாஜி