ராயபுரம் அருள்மிகு வடபத்ரகாளியம்மன் வீரபத்திரர் கோவிலில் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. கொரோனாவில் இருந்து மக்கள் விடுபடவும் நாடு நலம் பெறவும் நாகபூஷணம்,ஜீவராஜ் குடும்பத்தினரால் மாவிளக்கு பூஜை நடைபெற்றது.
அனைவருக்கும் இலவசமாக பூஜை பொருட்கள் கொடுத்து தங்கள் பொருட்செலவில் மாவிளக்கு பூஜையை நடத்தினர். பொதுமக்கள், மகளிர், நண்பர்கள் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த வரும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் தங்கதுரை