ஆவடி நரிக்குறவர் இல்லத்தில் உணவு உண்டு நல திட்டங்களை வழங்கினார் முதலமைச்சர்

 


      

  ஆவடி நரிக்குறவர் இல்லத்தில் காலை உணவு உண்ட முதலமைச்சர ❤️

 (15-04-22) நரிக்குறவர் மக்களை நேரில் சென்று பார்த்து காலை உணவு உண்டு மற்றும் தேநீர்  அருந்தினார்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன்பின் நலத்திட்டங்களை வழங்கி உரையாற்றினார் அவர்கள் உணவில் அதிகம் காரம் சேர்க்கப்பட்டுள்ளது என்றேன் அதற்கு அவர்கள் அதிகம் காரம் சேர்த்தால்,  குரானா போன்ற வியாதிகள் நம்மை தாக்காது என்று கூறினார்கள்.



திருமுல்லைவாயில் குடியிருப்பு பகுதியில் உள்ள ஜெயா நகரில் நரிக்குறவர் பயனாளிகளுக்கு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை 39 நபர்களுக்கும், குடும்ப அட்டை 20 நபர்களுக்கும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை 4 பேருக்கும், சாலையோர வியாபாரம் செய்ய கடனுதவி 38 நபர்களுக்கும் என மொத்தம் 101 நரிகுறவர் பயனாளிகளுக்கு நல திட்டங்கள் வழங்கினார் முதல்வர். 

உடன்  பால்வளத்தறை அமைச்சர் சா.மு. நாசர், நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா இ.ஆ ப.  மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ்.இ.ஆ.ப உடன் இருந்தனர்.




அம்பத்தூர் காவல் நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு !


சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் அறையில் அமர்ந்து காவலர்கள் வார விடுப்பு பதிவேட்டை ஆய்வு செய்தார்.

👀👀❤👀❤👀👀

    👮சென்னை ஈசிஆர் சாலையில், கடற்கரையில் பெண் ஒருவரிடம் காவல்துறை அதிகாரி தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுவது குறித்து, விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.


நிருபர் பாலாஜி