கலை கட்டும் தேர்தல் பிரச்சாரம்

 



    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவு



இராயபுரம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட 49வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சென்னை வடக்கு மாவட்டக் கழக பொறுப்பாளர்  தா.இளையஅருணா அவர்களை ஆதரித்து 49வது வட்ட கழக செயலாளர் J.ஜெயபாலன் மற்றும் ட.சீனிவாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தீவிர வாக்குசேகரிப்பில் இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் இரா.மூர்த்தி அவர்கள் கலந்துகொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் மாநில, மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் கழக உடன் பிறப்புக்கள் மற்றும் தோழமை கட்சியினர் ஆகியோர் உடனிருந்தனர்.


நிருபர் கார்த்திக்