45வது புத்தகக் கண்காட்சியை முதல்வர் தொடங்கி வைத்தார்

 


        45-வது புத்தக கண்காட்சி சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடைபெறும்.  புத்தக கண்காட்சி கொரோனா கட்டுப்பாடடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.நிலையில் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறந்திருக்கும் நிலையில், புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த அனுமதி தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.  புத்தக கண்காட்சி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது.


 தமிழக அரசின் அனுமதியை தொடர்ந்து சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில்  45-வது புத்தக கண்காட்சியை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.


புத்தக கண்காட்சி  பிப்ரவரி 16 முதல் வருகிற மார்ச் 6-ம் தேதி வரை தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். 650 அரங்குகளில் சுமார் பல ஆயிரம்  தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிபடுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.


நிருபர் பாலாஜி