ஒரு வரிச் செய்தி சுருக்கம்

 


       தமிழகம் முழுவதும் 4வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது


காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி முகாம்கள் செயல்படும்


20 ஆயிரம் முகாம்களில் 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்த இலக்கு



    👉தேர்தல் வாக்குறுதியில் கூறியதை போல வள்ளலாருக்கு மணிமண்டபம் அமைக்க உள்ளோம்; திருக்கோயில்களில் வரக்கூடிய நகைகளை கணக்கிட்டு பாதுகாக்க உள்ளோம்


-அமைச்சர் சேகர்பாபு.


    👉சத்தியமங்கலம்-மைசூரு நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தை மறித்து பயணிகளை மிரட்டிய யானைகள்; அடுத்தடுத்து வந்த 3 லாரிகளையும் மடக்கி  கரும்புகளை  உருவி தின்றதால் பரபரப்பு.


    👉திருவள்ளூர்: புல்லரம்பாக்கம் பகுதியில் முருகன் என்பவர் ஒட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி கொலை.


    👉தைவானில் இடிந்து விழுந்து தரைமட்டமான 7 அடுக்குமாடி ஹோட்டல் கட்டிடம்


    👉ஈரோடு: மரப்பாலம் நேதாஜி வீதியில் மழை காரணமாக மண்சுவர் விழுந்து மூதாட்டி பலி.


    👉திமுகவினர் மேஜிக் பிரச்சாரம் செய்வார்கள்...! உஷாராக இருக்க வேண்டும் - அண்ணாமலை பேச்சு



    👉உத்தரகாண்ட்: பனிச்சரிவில் சிக்கி கடற்படை வீரர்கள் 4 பேர் பலி


    👉ஜம்மு காஷ்மீரில் 3 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் ஒருவர் பலி தீவிரவாதிகள் தேடும் பணி தொடர்கிறது


    👉அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு தடை -  வலுக்கும் போராட்டம்


    👉தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.


    👉முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது தமிழ்நாடு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு


கடந்த 24 ஆம் தேதி வெங்கடாசலம், அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை  அதிரடி சோதனை


    👉பெங்களூர்: கொரோனாவால் இறந்த கணவர் - ஒரு வருடம் கழித்து 2 குழந்தைகளுடன் மனைவி தற்கொலை


    👉மக்கள் உயிர் முக்கியம்; புலியை கொல்வது தீர்வல்ல - கமல்ஹாசன்


நிருபர் பாஸ்கர்


😷முக கவசம் உயிர் கவசம்😷