சத்துணவு ஊழியர்களின் ஓய்வு வயது நீடிப்பு முதல்வர்

 


          அரசு ஊழியர்களுக்கு வரும் ஜனவரி 1 முதல் அகவிலைப்படி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 


சத்துணவு ஊழியர்களின் ஒய்வு வயது 58 லிருந்து 60-ஆக நீட்டிக்கப்படும். மேலும் ஓய்வூதியதாரர்களுக்கும் ஜனவரி 1 முதல் அகவிலைப்படி வழங்கப்படும். இதனை சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


போராட்ட காலங்களில் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 


ஸ்டிரைக்கில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் வேலைநிறுத்த காலம், பணிநீக்க காலம் வேலைநாட்களாக கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


😷முக கவசம் உயிர்க்கவசம்😷