நகைக் கடன் தள்ளுபடி, யார் யாருக்கு? வெளியான முக்கிய தகவல்

 




தமிழ்நாட்டில் நகைக் கடன் தள்ளுபடி யார் யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நகைக் கடன் தள்ளுபடியை பொறுத்தவரை 5 பவுன் வரை நகைக் கடன் பெற்றவர்கள் தள்ளுபடி திட்டத்தில் பயன்பெறுவர்.

கடன் அடமானமாக வைக்கப்பட்ட நகை 5 பவுனுக்கும் அதிகமான எடை கொண்டதாக இருந்தாலும், 5 பவுனுக்கான கடன் தொகை மட்டுமே பெற்றிருந்தால் அவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும்.

நகைக் கடன் பெற்றவரோ, அவரது ரத்த உறவுகளோ அரசுப் பணிகளில் இருந்தால் அவர்களுக்கு தள்ளுபடி கிடையாது.

தள்ளுபடி என்பதை இலக்காக வைத்து முறைகேடாக யாரேனும் நகைக் கடன் பெற்றிருந்தாலும் அவர்களும் தள்ளுபடி பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியாகும்