இரு வரி செய்திகள்

 


        சென்னை, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்கள் திருக்குறள் பன்னாட்டு பதிப்பு புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.



துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு இடங்களில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி இனிப்பு, மதிய உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு வழங்கினார்.

                    *************

       👤ஆப்கானிஸ்தானில் இருந்து 129 பயணிகளுடன் தாயகம் புறப்பட்டது ஏர் இந்தியா விமானம்


ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றவுள்ள நிலையில் மத்திய அரசு நடவடிக்கை.

                   *************

       👤நீலகிரி மாவட்டம் கூடலூர் - பந்தலூர் சாலையில் பொன்னூர் என்னுமிடத்தில் பாலத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு; போலீசார் விசாரணை.

                  **************

       👤தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றிட பேரவையில் சிறப்பு தீர்மானம்: கமல்ஹாசன் வலியுறுத்தல்



       திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோவிலில் நாட்டின் 75வது சுதந்திர தின கொடி ஏற்றப்பட்டது. கோவில் யானை காந்திமதி பிளிறலுடன் தும்பிக்கையை உயர்த்தி வணக்கம் செலுத்தியது

  


    

       ஆகஸ்ட் 27ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நடிகை மீரா மிதுன் புழல் சிறையில் அடைப்பு

 நடிகை மீரா மிதுனை வரும் 27- தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பட்டியளித்தோரை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய வழக்கில் மீரா மிதுனுக்கு காவல் வழங்கப்பட்டுள்ளது.



       இணையத்தைக் கலக்கும் தமிழ்நாட்டின் முதல் பெண் "ஓதுவாரின்" பாடல்



டெல்லி : டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீர‌ர்களுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் பாராட்டு விழா 


மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் பங்கேற்பு


முக கவசம் உயிர கவசம்