💚உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி கிருபாகரன் பணி ஓய்வு பெறுகிறார்💚

 


    💚உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி கிருபாகரன் நாளை பணி ஓய்வு பெறுகிறார்💚


        சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியுடன் வழக்குகளை விசாரித்தது மகிழ்ச்சி என்று நீதிபதி என்.கிருபாகரன் கூறியுள்ளார். நாளையுடன் ஓய்வுபெறுவதையொட்டி உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரனுக்கு வழக்கறிஞர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி பிறந்தவர் நீதிபதி என்.கிருபாகரன். இவர் தனது சட்டப்படிப்பை முடித்து கடந்த 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி வழக்கறிஞராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது பணியை தொடங்கினார்.

 

சிவில் மற்றும் வரி தொடர்பான வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற இவர் மத்திய மற்றும் மாநில அரசு வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். 2009 மார்ச் 31ல் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.


உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி கிருபாகரன் நாளை பணி ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து, பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு நீதிபதி கிருபாகரனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.