கருணாநிதியின் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி.



        சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மெரினாவில் உள்ள நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அஞ்சலி செலுத்தினார்.


திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார். 50 ஆண்டுகள் திமுக தலைவராகவும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், 19 ஆண்டுகள் முதலமைச்சராகவும் இருந்துள்ளார்.


 முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்களின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்துள்ள திமுக, கருணாநிதியின் நினைவு தினத்தை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா 3வது அலை எச்சரிக்கை காரணமாக, அனைத்தும் கைவிடப்பட்டது.


மேலும் திமுக தொண்டர்கள் அவரவர் வீடுகளில் கருணாநிதியின் படத்தை வைத்து அஞ்சலி செலுத்துமாறு தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.


 கருணாநிதி நினைவு தினமான இன்று காலை சென்னை மெரினா கடற்கரை அண்ணா நினைவிட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினர். அவருடன், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோரும், எம்பிக்கள் ர் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.


கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம், ஆழ்வார்பேட்டை இல்லம் ஆகிய இடங்களிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.


பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது - உதயநிதி ஸ்டாலின்