மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி - 2021-22 பட்ஜெட் தாக்கல் நிதியமைச்சர்

 


       திமுக ஆட்சி அமைந்த பிறகு முதன் முறையாக தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல்.


தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று, ஆட்சி பொறுப்பேற்ற பின், தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை  சென்னை  கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்தார்.


இன்று(13-08-21) தொடங்கியுள்ள தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

 

   தமிழகத்தில் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மேலும்,  வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.  அதன்பின்பு, பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 16-ம் தேதி முதல் 19 வரை நடைபெற இருக்கிறது.


தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை :


💢நிலங்களுக்கான வில்லங்ச் சான்றிதலை 1975ம் ஆண்டு வரை இணையம் மூலம் சரிபார்க்கலாம் என்ற வசதியை 1950ம் ஆண்டு வரை சரிபார்க்கலாம் என விரிவுபடுத்தப்படும்.

💥கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை ரூ.2756 கோடி தள்ளுபடி செய்யப்படும். பயிர்க்கடன், நகைக்கடன் தள்ளுபடி தற்போதைக்கு இல்லை .

💥குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தின் நோக்கம் இல்லத்தரசிகளுக்கு நிதியுதவி வழங்கவே, இதற்காக குடும்ப தலைவரின் பெயரை மாற்றத் தேவையில்லை. இல்லத்தரசிகளுக்கு உதவித்தொகை நிச்சியமாக வீடு தேடி வரும் என அறிவிப்பு.

💥தமிழ்நாடு அரசின் வரிக்குறைப்பு நடவடிக்கையால் மீண்டும் தமிழ்நாட்டில் ரூ.100க்கு கீழ் இரட்டை இலக்கத்தில் வருகிறது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை.

💥பெட்ரோல் மீது விதிக்கப்படும் மாநில வரியை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் குறைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

💥கருவூலங்கள் விரிவுபடுத்தப்பட்டு அரசு, உள்ளாட்சி அமைப்புகள் பணம் செலுத்தும் வங்கிகளாக மாற்றம் செய்யப்படும்.

💥பணியின் போது உயிரிழக்கும் அரசு பணியாளர்களின் குடும்பத்தினருக்கு, குடும்ப பாதுகாப்பு நிதியில் இருந்து வழங்கப்படும் உதவி மானியம் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.

💥ஒருங்கிணைந்த குழைந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.2,356 கோடி ஒதுக்கீடு.

💥இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்கான ரூ.225.62 நிதி ஒதுக்கீடு.

💥தேவையின் அடிப்படையில் சட்டமன்ற தொகுதிகளிலும் தலா ரூ.3 கோடி செலவில் விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்.

💥கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் ஏழைகளுக்கான இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு ரூ.490 கோடி ஒதுக்கீடு.

💥வெளிநாட்டிற்கு சென்று கல்வி கற்க கல்வி உதவித்தொகை திட்டம் திருத்தி அமைக்கப்படும்.

💥அங்கான்வாடி தரத்தை உயர்த்த சிறப்பு ஒதுக்கீடாக 48.48 கோடி வழங்கப்பட்டுள்ளது.

💥புரட்சி தலைவர் எம்ஜிஆர் மதிய உணவுத் திட்டத்திற்கு ரூ.1,725.41 கோடி ஒதுக்கீடு.

💥திருநங்கைகள் பயன்பெறும் வகையில் ஓய்வூதிய திட்டத்திற்காக ரூ.1.50 கோடி ஒதுக்கீடு.

💥சுற்றுலா துறைக்கு 187.59கோடி ஒதுக்கீடு. 300 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்.

💥பழனி தண்டாயுதபாணி கோயில் மூலம் புதிய சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு, சித்தர்களின் அறிவாற்றலுடைய தொன்மைவாய்ந்த மருத்துவ முறையான சித்தமருத்துவம் மேம்படுத்தப்படும்.

💥போதிய நிதி வசதி இல்லாத 12,959 திருக்கோயில்களில் ஒரு கால பூஜை திட்டத்தை செயல்படுத்த உதவும் வகையில் ரூ.130 கோடி நிதி ஏற்படுத்தப்படும்.

💥திமுக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் ஆக்ரமிப்புகளில் இருந்த திருக்கோயில்களுக்கு சொந்தமான 187.91 ஏக்கர் நிலங்கள் மீட்பு.

💥இந்த ஆண்டு 100 திருக்கோவில்களில், நந்தவனம் ஆகியவற்றை சீரமைக்க 100 கோடி ஒதுக்கீடு.

💥திருக்கோவில்களை நிர்வகிக்க பரம்பரை அல்லாத அரங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.

💥ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான வேலைநாட்கள் மற்றும் ஊதியத்தை அதிகரிக்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும்.

💥டிசம்பர் மாதத்திற்குள் 29 துறைகள் மூலம் வழங்கப்படும். 600க்கும் மேற்பட்ட சேவைகள் மின்னணு மூலம் வழங்கப்படும்.

💥கனிமங்கள் மூலம் ஏற்படும் வருவாய் இழப்பை தவிர்க்க புதிய கொள்கை உருவாக்கம்; புதிய கனிம வள கொள்கை மூலம் அரசின் வருவாய் பெருமளவு அதிகரிக்கப்படும்.

💥மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும்.

💥மகப்பேறு நிதி உதவித்திட்டத்திற்கு 959.20 கோடி ஒதுக்கீடு.

💥மாநிலத்தின் 2ம் நிலை மற்றும் 3ம் நிலை நகரங்களிலும் டைடல் பார்க் ஏற்படுத்தப்படும். முதற்கட்டமாக விழுப்புரம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடியில் டைடல் பார்க் உருவாக்கப்படும்.

💥திருவண்ணாமலை, தர்மபுரி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், தேனி மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.

💥தூத்துக்குடியில் தொழில்துறை அலகுகளுக்காக 60 எம்.எல்.டி கடல்நீர் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

💥இலவச ஆம்புலன்ஸ் எண்ணிக்கை 1303-ஆக உயர்த்தப்பட்டு சேவை மேம்படுத்தப்படும்.

💥தொழில் துறையில் பின்தங்கிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 45 ஆயிரம் ஏக்கர் அளவிலான நில வங்கித் தொகுப்புகள் உருவாக்கப்படும்.

💥மாவட்ட வேலைவாய்ப்பு மையங்களுக்கு புத்துயிர் அளிக்கப்படும். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து புதிய தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும்.

💥தமிழ்நாட்டில் தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

💥மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு ரூ.1046.09 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

💥25 கலை கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைக்கு 10 கோடி ஒதுக்கீடு.

💥உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369.09 கோடி நிதி ஒதுக்கீடு.

💥தமிழ்நாடு ஆளில்லா விமான கழகமானது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்படும்.

💥விவசாயத்திற்கான இலவச மின்சாரம், மானியம் மற்றும் மின் துறை இழப்புகளுக்காக ரூ.9,872.77 கோடி ஒதுக்கீடு.

💥இந்த ஆண்டு புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.

💥உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் அகில இந்திய அளவில் 27.1% ஆக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அது 51.% ஆக உள்ளது. 17 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதத்தையும் கொண்டு நாட்டிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.

💥அடிப்படைக் கல்வி அறிவு மற்றும் கணித அறிவை உறுதி செய்ய 'எண்ணும் எழுத்தும் இயக்கம்' ரூ.66.70 கோடி மதிப்பீட்டில் தீவிரமாக செயல்படுத்தப்படும்.

அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்க வாய்ப்பு அளிக்கும் நோக்கில் மாதிரிப் பள்ளிகள் அமைத்திட சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

💥865 மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் ரூ.20 கோடியில் ஸ்மார்ட் வகுப்புகள் உருவாக்கப்படும்.

💥பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.32,599.54 கோடி நிதி ஒதுக்கீடு. தமிழ்நாட்டுக்கு தனித்துவமான கல்விக்கொள்கை உருவாக்கப்படும்

💥ஏறத்தாழ 2,500 மெகாவாட் மின்சாரத்தை மின் சந்தைகளில் இருந்து வாங்கியே அரசு சமாளிக்கிறது. தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற கூற்று தவறானது - நிதியமைச்சர்.

💥வீடுகளுக்கான அரசு மானியம் ரூ.2.76 லட்சமாக உயர்வு.

💥மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறுகளை ஆராய அறிக்கை தயார் செய்யப்படும்.

💥1000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி நிதி ஒதுக்கீடு.

💥2,200 கி.மீ. சாலைகள் அகலப்படுத்தப்படும்.

💥ரூ.17,899.17 கோடி நெடுஞ்சாலைகள் துறைக்கு ஒதுக்கீடு. புறவழிச்சாலைகள் இல்லாத 59 நகராட்சிகளுக்கு புறவழிச்சாலைகள் ஏற்படுத்தப்படும்.

💥தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954 கோடி ஒதுக்கீடு. 10 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க அரசு உறுதியேற்றுள்ளது.

புதிதாக பெருநகர வளர்ச்சி குழுமங்கள் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் ஓசூரில் ஏற்படுத்தப்படும்.

💥உயிரியல் அகழ்ந்தெடுப்பு முறையில் சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கு மீட்டெடுக்கப்படும்.

💥கணேசபுரம், கொன்னூர் நெடுஞ்சாலை, உஸ்மான் சாலை ஆகிய இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும்.

💥திருச்சியில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம், வணிக வளாகம் ஏற்படுத்தப்படும்

💥2021 - 22 ஆம் ஆண்டிற்குள் 200 குளங்களை தரம் உயர்த்த ரூ.111.24 கொடி ஒதுக்கீடு.

💥தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன் உறுதி செய்யப்படும்.

💙💥கொசஸ்தலை ஆற்றில் வெள்ள நீர் வடிகால் ஏற்படுத்த ரூ.87 கோடி செலவில் திட்டம்.

💙💥பொது விநியோகத் திட்டத்தில் உணவு மானியத்திற்கான நிதி ரூ.8,437.57 கோடியாக உயர்வு - நிதியமைச்சர்

💥சென்னையில் பொதுஇடங்களில் சுவரொட்டிகள் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும்.

💥மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் நடைபாதைகள் மேம்படுத்தப்படும்

💥கலைஞர் பெயரில் நமக்கு நாமே திட்டம் ரூ.100 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

💥ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

💥கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.1200 கோடி மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்.

💥சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி ரூ.3 கோடி மீண்டும் அளிக்கப்படும்.

💥8 லட்சம் குடும்பங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் வீடு வழங்கப்படுவதை அரசு உறுதி செய்யும்.

💥மத்திய அரசின் தூய்மை பாரத இந்தியா திட்டத்திற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு.

💥ரூ.2000 கோடியில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படும்.

💥குக்கிராமங்களில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 55லிட்டர் தரமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும்.

💥கிராமப்புறங்களில் 1.27 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு.

💥உள்ளாட்சி அமைப்புகளின் ஆதரவுடன் 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்.

💥தமிழ்நாட்டில் 6 இடங்களில் புதிய மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் அமைக்கப்படும. இதற்காக ரூ.433 கோடி ஒதுக்கீடு

💥சென்னை காசிமேடு மீன்பிடி துறைகம் ரூ.150 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

💥பருவநிலை மாற்ற மேலாண்மை மற்றும் தணிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும்.

💥மீன்வளத்துறைக்கு ரூ.1149.79 கோடி ஒதுக்கீடு.

💥மேட்டூர், அமராவதி, வைகை, பேச்சிப்பாறை அணைகளின் நீர்தேக்க கொள்ளளவு பழைய நிலைக்கு உயர்த்தப்படும்.

💥தமிழ்நாடு முழுவதும் பாசன வசதியை மேம்படுத்த மொத்தம் ரூ.6607 கோடி ஒதுக்கீடு.

💥பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ.1,360 கோடி ஒதுக்கீடு.

💥30 கோடி செலவில் தமிழ்நாடு நீர்வள தகவல் மேலாண்மை அமைக்கப்படும்.

💥தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ.405.13 கோடி ஒதுக்கீடு.

💥நீதித்துறைக்கு ரூ.1,713 கோடி நிதி ஒதுக்கீடு, அனைத்து நீதிமன்றங்களுக்கும் போதிய கட்டடங்கள் இருப்பது உறுதி செய்யப்படும்.

💥அடுத்த 10 ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும்.

💥நியாய விலைக்கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு இந்த ஆண்டும் தொடர்ந்து வழங்கப்படும்

தேவையுள்ள இடங்களில் நியாயவிலைக்கடைகள் அமைப்பது குறித்து ஆய்வுகள் நடத்த சிறப்புக்குழு அமைக்கப்படும்.

💥விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி செல்ல அரசு உறுதியேற்றுள்ளது, இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.500 கோடி வரை நிதி ஒதுக்கீடு.

💥போக்குவரத்து ஆணையரகம், போக்குவரத்து சாலை பாதுகாப்பு ஆணையரகம் என பெயர் மாற்றம் செய்யப்படும்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து விசாரணை நடக்கும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்படும்.

காவல்துறைக்கு ரூ.8,930.29 கோடி நிதி ஒதுக்கீடு.

💥காவல்துறையில் 14,317 காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்

💥தமிழகத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்வுகளுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.

💥தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.80 கோடியும், தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடியும் ஒதுக்கீடு.

💥சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு ரூ.4807 கோடி ஒதுக்கீடு.

💥1921ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற பேரவை நிகழ்வுகள் குறித்த அனைத்து ஆவணங்களும் கணினி மயமாக்கப்படும்.

💙தமிழை ஆட்சி மொழியாக பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும். உலக அளவில் போற்றப்படும் தமிழ் படைப்புகள் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். தொழில்நுட்ப புத்தகங்கள் தமிழில் வெளியிடப்படும்.

💥கீழடி, சிவகளை, கொற்கை, ஆதிச்சநல்லூர் போன்ற தொல்லியல் ஆய்வு நடக்கும் இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இந்த பணிகளுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.

💥2010-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ள கலைஞர் 'செம்மொழி தமிழ் விருது' ரூ.10 லட்சம் பரிசுடன் இனி ஆண்டுதோறும் ஜூன் 3-ம் தேதி வழங்கப்படும்.

அனைத்து குடும்பங்களின் உண்மையான பொருளாதார நிலையை அறிய தரவுகள் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

பட்ஜெட் உரையில் பெரியார், அண்ணா, கலைஞருக்கு நிதியமைச்சர் புகழாரம்.


நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு இந்த பட்ஜெட் பொருந்தும்.

💙உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 2,29,216 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி வேளாண்மைக்கான தனி பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படும்.


💥பெட்ரோல், டீசல் வரி உயர்வால் மத்திய அரசுக்கு 69% வருவாய் அதிகரித்துள்ளது; மாநிலங்களுக்கு குறைந்த அளவே வரி வருவாய் பிரித்து அளிக்கப்படுகிறது.

💥2014ஆம் ஆண்டில் பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரி ரூ. 10.35ஆக இருந்தது தற்போது ரூ. 32.9ஆகவும் டீசல் மீதான வரி ரூ. 3.57ல் இருந்து ரூ. 31.8ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அனைத்து பொது சேவைகளிலும் மின்னணு அளவீட்டு முறை கொண்டு வரப்படும் - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரை

💥நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்க வழக்கு மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும். இதை கண்காணிக்க ஒய்வு பெற்ற நீதிபதி மற்றும் சட்ட வல்லுனர்கள் குழு அமைக்கப்படும்.

💥2.05 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான தமிழ்நாடு அரசின் நிலங்கள் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளன.

ஜிஎஸ்டி வரி செயல்பாட்டில் சிக்கல்கள் உள்ளன.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.


2021-21ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.


அதிமுக உறுப்பினர்களின் அமளிக்கிடையே பட்ஜெட்டை தாக்கல் செய்தார்  நிதியமைச்சர்.

பட்ஜெட் உரையில் பெரியார், அண்ணா, கலைஞருக்கு நிதியமைச்சர் புகழாரம்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.i


பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு.

வரும் திங்கள் அன்று பொதுவிவாதம் நடைபெறும் அப்போது பேசலாம் என்று சபாநாயகர் அறிவுறுத்தியும், நிதிநிலை அறிக்கையை புறக்கணித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு.

    

    திமுக மக்களை ஏமாற்றிவிட்டது’

நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகளை அளித்து திமுக மக்களை ஏமாற்றிவிட்டது - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி


நிருபர் கார்த்தி 


🙏முக கவசம் உயிர்க்கவசம்🙏