இரு வரி செய்திகள்

 


தமிழ் நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ஹசன் முகமது ஜின்னா தமிழக முதல்வர் முக.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்*



சென்னை கஸ்தூரிபாய் மருத்துவமனையில் தீ விபத்தின்போது சிகிச்சை பெற்றுவந்த 36 பச்சிளம் குழந்தைகளை  தீயணைப்பு வீரர்கள் வரும் முன்பே கண்ணாடிகளை உடைத்து குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் உயிர்களை காத்து செவிலியர் ஜெயக்குமாரை முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.



திண்டுக்கல்லில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திப்புசுல்தான் மணிமண்டப வளாகத்தில் மணிமாறன் DSP மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகர் தெற்கு காவல் ஆய்வாளர் கண்ணன் சார்பு ஆய்வாளர் அபூதல்ஹா மற்றும்  காவலர்கள் கலந்து கொண்டனர்.



*கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலைமை செயலாளர் இறையன்பு கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை*.


கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்று கட்டுபட்டுத்த அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.



திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி கொடைக்கானல் பூண்டி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார்



கோவை சரவணம்பட்டி முத்தூஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  வந்த பெண்ணின் 10 சவரன்  தங்க நகை திருட்டு. மருத்துவமனை லாக்கரில் வைக்கப்பட்ட நகை திருடப்பட்டது குறித்து சிசிடிவி காட்சிகளை கொண்டு அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் சரவணம்பட்டி போலீசார் விசாரணை.



😡கடன் தவணை கட்டுமாறு தனியார் வங்கிகள் பொதுமக்களுக்கு நெருக்கடி தருவதாக திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெரு, நாராயணப்பிள்ளை தோட்டம் பகுதிகளில் வசிப்பவர்கள் புகார்!


😡ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணிபுரியும் .பிரேம் குமார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முதியோர் இல்லங்களுக்கு நிவாரணப் பொருட்களை ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி அசோகன்  தலைமையில் வழங்கினார்கள்.



😡தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை சமர்பிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.இராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!



😡இந்தியாவின் ஒரே அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் குத்தகைக் காலம் முடிவடைந்ததால் மீண்டும் ரஷ்யா சென்றது


            நிருபர், பாலாஜி