3வது அலையை எதிர்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் கொரோனா தொற்று 3வது அலையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவும், அரசு மருத்துவமனைகளுக்கு திரவ ஆக்சிஜன் வாங்கவும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
**************
புதிய டிஜிபியாக பதவியேற்ற சைலேந்திரபாபு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் சந்திப்பு
தமிழ்நாடு காவல்துறையின் புதிய டிஜிபியாக பதவியேற்றுள்ள சைலேந்திரபாபு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
**************
நடிகர் எம்.கே. தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பழம்பெரும் நடிகர் எம்.கே. தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கினார் மேலும். அரசு சார்பில், குறைந்த வாடகையில் குடியிருக்க தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக்குடியிருப்பில் வீடு ஒதுக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
🙏 முகக் கவசம் உயிர்க்கவசம்🙏