இன்றைய ராசிபலன்
   

         


              இன்றைய ராசிபலன்


(21-05-2021)


மேஷம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் குதூகலம் உண்டாகும். பயணங்களால் வீண் செலவுகள் வரலாம் தவிர்க்கவும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும்.



ரிஷபம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் உடல் நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். கோபமான பேச்சுக்களைத் தவிர்க்கவும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் நிதானமாக செயல்படவும்.



மிதுனம்

குரு பார்வை உங்களுக்கு குதூகலத்தைக் கொடுக்கும். திருமண சுப காரியம் தொடர்பாக பேசலாம்.
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.



கடகம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வெளியூர் பயணம் செல்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் விற்பனையில் லாபம் கிடைக்கும்.



சிம்மம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். மன நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் செல்லும் பயணங்களில் புதிய நபர் அறிமுகம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். பெண்களுக்கு இது சந்தோஷமான நாள்



.கன்னி

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.



விருச்சிகம்

விருச்சிகம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும்.எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள் . உத்தி
யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். சிந்தனையுடன் செயல்பட்டு வெற்றி பெறும் நாள்.


துலாம்

 எதிலும் வெற்றி பெறுவீர்கள். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும்நாள்.


தனுசு

 திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்
கங்களை கற்று கொள்வீர்கள். சாதிக்கும் நாள்

மகரம்


 சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை எல்லாம் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம் . வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் மற்றவர்களின் குறை
களை சுட்டிக்காட்ட வேண்டாம். பொறுமை தேவைப்படும் நாள்.


கும்பம்


 கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும்.  மகளுக்கு நல்ல வரன் அமையும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் ஆதரிப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.


மீனம்


கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும் . பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதுயுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். தொட்டது துலங்கும் நாள்.



வடிவமைப்பு திருமதி மோகனா செல்வராஜ்