இன்று ஒரு தகவல்

 



             நமது உடல் நலம் 


விரல்களில் அடிக்கடி நெட்டை எடுக்காதீங்க!!


மனித உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமாக விளங்கும் கைவிரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணங்களையும், தனித்தனி செயல்பாடுகளுக்கு உதவும் வகையிலும் உள்ளது.


👉 இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விரல்களில் வீக்கம், வலி, காயம் போன்றவை ஏற்பட்டால், அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.


👉 மேலும் உடலின் உட்பகுதியில் நிகழும் பாதிப்புகளுக்கும், விரல்களில் ஏற்படும் பாதிப்புக்கும் அதிக தொடர்பு உள்ளது.


👉 விரல்களுக்கு செல்லும் நரம்புகள், இரத்தக் குழாய்கள், எலும்புகள் மற்றும் தசைகள், போன்ற உறுப்புகளின் பாதிப்பை வெளிப்படுத்தும் அறிகுறியாக கூட விரல்களில் வலியை ஏற்படுத்தும்.


விரல்களில் நெட்டை எடுக்கலாமா ? 


👉 முதலில் விரல்களில் ஏற்படும் வலியை தடுக்க, விரல்களில் நெட்டை எடுப்பது மிகவும் ஆபத்தான விஷயமாகும். அடிக்கடி விரல்களில் நெட்டை எடுப்பதால், விரல்களுக்கு செல்ல வேண்டிய நரம்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.


👉 மேலும் நெட்டை எடுக்கும் நேரம் சுகமாக இருந்தாலும், அதன் பின் பக்கவாதம் ஏற்படும் அளவிற்கு, அது பாதிப்பை உண்டாக்கிவிடுகிறது.


👉 விரல்களில் வலி ஏற்படும் போது, சிவப்பு நிறமாக மாறுவது, வியர்வை ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.


👉 கை விரல்களை அதிகமாக பயன்படுத்தும் பணியில் ஈடுபட்டால், கை விரல்களுக்கான பயிற்சிகளை செய்து, விரல்களுக்கு கண்டிப்பாக ஓய்வு கொடுக்க வேண்டும்.


👉 இல்லையெனில், விரல்கள் முழுமையாக சோர்வடைந்து, அது நரம்பு மண்டலத்தை தாக்கி, அதிக வலியை ஏற்படுத்தும். அதனால், விரல்களுக்கான சிறு சிறு பயிற்சிகளை முன்னெச்சரிக்கையாக செய்து கொள்வது மிகவும் நல்லது. 


நமது உடல் நலம் 

காப்போம்


மோகனா செல்வராஜ்