இன்றைய ராசிபலன்

 


              இன்றைய ராசி பலன் 


*நமது உண்மை செய்திகள் ஆன்மீக குழுவில் இருந்து 25-04-2021 ராசிபலன்*

 

மேஷம்


நெருக்கமானவர்களுடனான பயணங்களால் நன்மை உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். மனைவியால் சுபவிரயங்கள் உண்டாகும். புதிய மனை வாங்குவதற்கான சாதகமான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும்



ரிஷபம்


இளைய சகோதரர்களால் சாதகமான சூழல் உண்டாகும். மனைகளில் வீடு கட்டுவதற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். துணிவுமிக்க தீரச் செயல்களால் மேன்மை உண்டாகும். பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். பொதுக்கூட்ட பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். எதிர்பார்த்த உதவிகளால் சாதகமான சூழல் ஏற்படும்.


மிதுனம்


நண்பர்களின் மூலம் பொருளாதார மேன்மைக்கான உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். பேச்சுக்களால் தனலாபம் கிடைக்கும். ஆடைச்சேர்க்கையால் மகிழ்ச்சி அடைவீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனை தொடர்பான செயல்பாடுகளில் லாபம் அதிகரிக்கும்.



கடகம்


உண்மையை உணர்ந்து மனம் அமைதி கொள்வீர்கள். புதுவிதமான எண்ணங்கள் மனதில் தோன்றும். முக்கியமான முடிவுகளில் நிதானம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வலது கண்ணில் ஏற்பட்ட உபாதைகள் குறையும்.



சிம்மம்


வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். பொதுக்காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். வாக்குறுதிகளை தவிர்ப்பது நன்மையளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் குறைந்து உறவுநிலை மேலோங்கும். மாணவர்களுக்கு கல்வியில் புதுவிதமான முயற்சிகளின் மூலம் நன்மை உண்டாகும்.



கன்னி


சபை தலைவராய் வீற்றிருக்க அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். வெளியூர் தொடர்பான தொழிலால் மதிப்புகள் அதிகரிக்கும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட விவாதங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.




துலாம்


அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். ஆன்மிக வழிபாட்டில் மனம் ஈடுபடும். மனதில் சுதந்திர உணர்வு மேம்படும். பிறமொழி பேசும் மக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். வாழ்க்கை பற்றிய புரிதல் அதிகரிக்கும்.



விருச்சகம்


பொருள் வரவால் சேமிப்புகள் உயரும். உயர் அதிகாரிகளால் சாதகமான வாய்ப்புகள் அமையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். சுயதொழில் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். தர்ம காரியங்கள் தொடர்பான சிந்தனைகளும், செயல்பாடுகளும் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் இருந்துவந்த காலதாமதங்கள் அகலும்.



தனுசு 


திடீர் யோகத்தால் எதிர்பாராத செயல்கள் நடைபெறும். தொழில் அலைச்சல்களால் அனுகூலமான லாபம் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் அபிவிருத்திக்கான சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் மேம்படும்.



மகரம்


புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தந்தையின் சொத்துக்களால் லாபம் ஏற்படும். பணிகளில் உயர்வு உண்டாகும். இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். பழைய நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். செய்யும் செயல்களில் இருந்துவந்த எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.



கும்பம்


எண்ணிய காரியங்களில் சில காலதாமதம் உண்டாகும். கடன் சார்ந்த சில செயல்பாடுகளால் மனவருத்தங்கள் ஏற்படும். சுரங்கம் தொடர்பான பணியில் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். மனதில் ஒருவிதமான பதற்றமான சூழல் உண்டாகும்.



மீனம்


எதிர்பாராத பரிசுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் பொருட்சேர்க்கை உண்டாகும். பிள்ளைகளால் சுபச்செலவுகள் ஏற்படும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். புதிய நுட்பங்களை பயிலுவதற்கான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைப்பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.



                 *🤘ஓம் நமசிவாய🙏*