பட்ஜெட் 2021

 


#Budget2021

மூத்த குடிமக்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை

*ஓய்வூதியம் பெறும் 75 வயதை கடந்த மூத்த குடிமக்களுக்கு வரி செலுத்துவதில் சலுகை

*வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை வரி விதிப்பில் இருந்து விலக்கு

*வருமான வரி தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க புதிய குழு அமைக்கப்படும்

*கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வரி வசூலில் சாதனை படைத்துள்ளோம்

*கடந்த ஆண்டில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 6.48 கோடியாக உயர்வு

*2014ஆம் ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 3.31 கோடியாக இருந்தது

*5ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு 41% பங்கு

*இரும்பு, ஜவுளி உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்களுக்கான சுங்கவரி குறைக்கப்படும்

*பிஎஃப் பங்கு தொகையை தாமதமாக செலுத்துவதற்கான அபராதம் இனி இல்லை

உயர்கல்வி ஆணையம் விரைவில் அமைக்கப்படும்

* செவிலியர்கள் நலனுக்காக புதிய ஆணையம் அமைக்கப்படும்

* மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும்

* தேயிலை தொழிலாளர்கள் நலனுக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு 

* எதிர்வரும் நிதியாண்டில் நிதி பற்றாக்குறை ஜிடிபியில் இருந்து 6.8%ஆக இருக்கும் என கணிப்பு 

* ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் 32 மாநிலங்களில் செயல்படுத்தப்படும்

* விவசாய கடன் இலக்கு இந்த நிதியாண்டில் ரூ.16.5 லட்சம் கோடியாக உயர்வு 

* 5 முக்கிய இடங்களில் மீன்பிடி மையங்கள் அமைக்கப்படும்

புதிய வேளாண் கடன்களுக்காக ரூ.16.5 லட்சம் கோடி ஒதுக்கீடு

*சென்னை உள்ளிட்ட ஐந்து முக்கிய துறைமுகங்களை மேம்படுத்த மத்திய அரசு முடிவு

*கேரள மாநிலத்தில் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ரூ.65,000 கோடி ஒதுக்கீடு

*அசாம் மாநிலத்திற்கு ரூ.3,400 கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்

*மேற்கு வங்கத்தில் சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.25,000 கோடி ஒதுக்கீடு

*5 ஆண்டுகளில் ரூ.4,000 கோடி செலவில் கடற்பணிகள் மேற்கொள்ளப்படும்

*உலகிலேயே கார்ப்பரேட் வரி இந்தியாவில் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது

*பட்ஜெட் உரையின் போது திருக்குறளை மேற்கோள் காட்டினார் நிர்மலா சீதாராமன்

* சிறு நிறுவனங்களின் மூலதனம் ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.2 கோடியாக உயர்வு

* சமூக பாதுகாப்பு திட்டங்கள் பிளாட்பார்மில் வசிக்கும் மக்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்

* புலம்பெயர்ந்த மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் பற்றிய தகவல் சேகரிக்க தனி இணைய பக்கம்

* தனியார் பங்களிப்புடன், 100 சைனிக் பள்ளிகள், ஆரம்பிக்கப்படும்

* லடாக்கில் உள்ள லே பகுதியில் மத்திய பல்கலைக் கழகம் அமைக்கப்படும்

* பழங்குடியினர் பகுதிகளில் 750 பள்ளிகள் அமைக்கப்படும்

* பழங்குடியின மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகைக்காக ரூ.35.219 கோடி ஒதுக்கீடு 

டிஜிட்டல் பரிமாற்ற திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1,500 கோடி ஒதுக்கீடு

அரசின் முக்கிய திட்டங்களை மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்ய புதிய திட்டம்

நிலவுக்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் ககன்யான் திட்டத்தை டிசம்பர் 2021ல் செயல்படுத்த திட்டம்

மேலும் 100 மாவட்டங்களில் குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகிக்க முடிவு

*சுற்று சூழலை பாதுகாக்க அடுத்த ஆண்டு ஹைட்ரஜன் எரிவாயு திட்டம் செயல்படுத்தப்படும்

*விவசாயிகள் நலனை காக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது

*வேளாண் விளைபொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விலை நிர்ணயம் செய்ய அரசு திட்டம்

*Rs.2,000 கோடியில் 7 துறைமுக திட்டங்கள் செயல்படுத்தப்படும்

*கடந்த 6 ஆண்டுகளில் மின் துறை அதிக வளர்ச்சி அடைந்துள்ளது

*மின் துறையில் 138 ஜிகாவாட் திறன் சேர்க்கப்பட்டுள்ளது -

2022-க்குள் ஏர் இந்தியா பங்குகள் விற்கப்படும்"

*2022-ம் ஆண்டுக்குள் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் முழுமையாக தனியாருக்கு விற்கப்படும் - நிர்மலா சீதாராமன்

 பொதுத்துறை வங்கிகளின் மறு மூலதன திட்டத்திற்கு ரூ.20,000 கோடி 

*துறையில் அன்னிய நேரடி முதலீடு அதிகரிப்பு/49 % இருந்து 74%ஆக உயர்த்தி அறிவிப்பு

*பொதுத்துறை வங்கிகளின் மறு மூலதன திட்டத்திற்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு

*இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு வருவாய் ஈட்ட திட்டம்

*மேலும் இரண்டு பொதுத்துறை வங்கிகள், ஒரு காப்பீடு நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு

| நடப்பாண்டிற்கான பட்ஜெட், 6 முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது - நிர்மலா சீதாராமன்

*மத்திய அரசு மே மாதத்தில் 'ஆத்ம நிர்பர் பாரத்' தொகுப்பை அறிவித்தது - நிர்மலா சீதாராமன்

*'ஆத்ம நிர்பர் பாரத் திட்டம்' 130 கோடி இந்தியர்களுடைய நம்பிக்கையின் வெளிப்பாடு 

*பிரதமரின் கரீப் கல்யாண் திட்டம், ஆத்ம நிர்பர் பாரத் திட்டம் ஆகியவை 5 மினி பட்ஜெட்டுகளுக்கு சமம் 

*11ஆயிரம் சுகாதார மையங்கள் ஏற்படுத்தப்படும்

*நாட்டில் மாசுபாட்டை தவிர்க்க நகர்புற தூய்மை இந்தியா திட்டம் 2.0 அறிமுகம்

*நகர்புற பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படும் 

*2.86 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும்

*இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும்

*காற்று மாசுவை தடுக்க ரூ.2,217 கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்

 63,000 கோடி செலவில் சென்னை மெட்ரோ இரண்டாம் அலகு திட்டம் செயல்படுத்தப்படும்

* மின் விநியோகத்தில் தனியாருக்கு அனுமதி வழங்கப்படும்

* பொது போக்குவரத்து பேருந்து வசதிக்கு ரூ.18,000 கோடி ஒதுக்கீடு

* 2023ஆம் ஆண்டு டிசம்பருக்குள் அனைத்து ரயில் வழித்தடமும் மின் மயமாக்கப்படும் 

* கப்பல்களை மறுசுழற்சி செய்யும் ஆலைகளுக்கு பிரத்தியேக தளங்கள் உருவாக்கப்படும் 

* ஜம்மு - காஷ்மீருக்கு பிரத்தியேக எரிவாயு குழாய் தடம் அமைக்கப்படும் 

* ரயில்வே துறை - ரூ.1.10 லட்சம் கோடி ஒதுக்கீடு

இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும்

* இந்தியாவின் வளர்ச்சிக்கு 6 முக்கிய துறைகள் தூண்களாகக் கவனிக்கப்படும் 

* பழைய வாகனங்களைத் திரும்பப் பெறும் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் 

* மூன்று ஆண்டுகளில் முக்கிய நகரங்களில் ஏழு ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் 

* உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு, 3 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு நிதியுதவி அளிக்கப்படும் 

* ஜூன் 2022ம் ஆண்டுக்குள் மேற்கு - கிழக்குப் பகுதிகளில் சரக்கு பாதை அமைக்கப்படும்

 எதிர்பாராத சூழலுக்கு இடையே மத்திய பட்ஜெட் தயாரிப்பு

*கொரோனா காலத்தில் மக்களுக்கு பல்வேறு நிவாரண திட்டங்கள் அறிவிப்பு

*கொரோனா காலத்தில் இரவு, பகல் பாராமல் பணியாற்றிய முன்கள பணியாளர்களுக்கு மனமார்ந்த நன்றி

*27.1 லட்சம் கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது

*மூன்று ஆத்ம நிர்பர் பாரத் தொகுப்பு அறிவிக்கப்பட்டது

*கொரோனா தடுப்பூசி கிடைக்க பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கு நன்றி

*இந்தியா நம்பிக்கை நாடாக திகழ்கிறது

*ஆஸி.யில் இந்திய கிரிக்கெட் அணி அடைந்த வெற்றி, நமது வலிமையை காட்டுகிறது

*உலக நாடுகளால் நம்பிக்கைக்குரிய நாடாக இந்தியா பார்க்கப்படுகிறது

 தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் இல்லை