நாமக்கல் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா

 


ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு நேற்று 1  லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. 

நாமக்கல்  கோட்டையில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோயிலில், 18 அடி  உயரத்தில் கைகூப்பி வணங்கிய நிலையில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர்  காட்சியளிக்கிறார். 

மார்கழி மாதம் அமாவாசையையொட்டி, நேற்று இங்கு  ஹனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு  கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு 1 லட்சத்து 8 வடைமலை சாத்தப்பட்டு  தீபாராதனை நடைபெற்றது.

கொரோனா பீதி, தொடர் மழையால்,  வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் சற்று குறைந்திருந்தது. காலை முதல் இரவு வரை பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.