இன்று ஒரு ஆன்மிக தகவல்

 


சிதம்பர நடராஜர் கோயிலில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் பற்றிய பதிவுகள் :

பூமத்திய ரேகையின் மையம் :

 ஒட்டுமொத்த உலகத்தின் மையப்புள்ளி இருக்கும் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி இடத்தில் அமைந்துள்ளது.

உச்சகட்ட அதிசயம் :

 பஞ்சபூத கோவில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம் காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம் நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது. 

மனித தோற்றம் :

மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோவில் 9 நுழைவு வாயில்களும் மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிக்கின்றது.

மூச்சுக்காற்றை குறிக்கிறது :

 விமானத்தின்மேல் இருக்கும் பொற்கூரை 21600 தங்கத்தகடுகளை கொண்டு செய்யபட்டுள்ளது. இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது.

நாடிகள் :

 இந்த 21600 தகடுகளை வேய 72000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 72000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது. இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும். 

ஐந்து படிகள் :

 பொன்னம்பலம் சற்று இடதுபுறமாக அமைக்கப்பட்டுள்ளது. இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும். இந்த படிகளை பஞ்சாட்சர படி என்று அழைக்கப்படுகின்றது. அதாவது சிவாயநம என்ற ஐந்து எழுத்தே அது. 

4 வேதங்கள் :

 கனகசபை பிற கோவில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனகசபையை தாங்க 4 தூண்கள் உள்ளன. இது 4 வேதங்களை குறிக்கின்றது.

ஆயக்கலைகள் :

 பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன. இவை 28 ஆகமங்களையும் சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன. இந்த 28 தூண்களும் 64   64 மேற் பலகைகளை கொண்டுள்ளது. இது 64 கலைகளை குறிக்கின்றது. இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள் மனித உடலில் ஓடும் பல ரத்த நாளங்களை குறிக்கின்றது.

பொற்கூரை :

பொற்கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள் 9 வகையான சக்தியை குறிக்கின்றது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள் 6 சாஸ்திரங்களையும் அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள் 18 புராணங்களையும் குறிக்கின்றது.

தாண்டவம் :

 சிதம்பர நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் கோலத்தின் கால் பெருவிரல் பூமியின் ஈர்ப்பு மையத்தில் உள்ளது. 

தீர்த்தங்கள் :

 சிவகங்கை பரமானந்த கூபம் வியாக்கிரபாத தீர்த்தம் அனந்த தீர்த்தம் நாகச்சேரி பிரம தீர்த்தம் சிவப்பிரியை புலிமேடு குய்ய தீர்த்தம் திருப்பாற்கடல் ஆகிய தீர்த்தங்கள் கோவிலில் அமைந்துள்ளன.

கோபுரங்கள் :

இக்கோவிலில் நான்கு ராஜகோபுரங்கள் உள்ளன. இவை ஏழு நிலைகளைக் கொண்டவையாகும். இக்கோவிலின் கிழக்கு கோபுரத்தில் 108 சிவதாண்டவங்களுக்குகாணச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 

ஓம் நமசிவாய

மோகனா செல்வராஜ்