முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்படும்”- அமைச்சர் விஜயபாஸ்கர்

 



கொரோனா தடுப்பூசிக்கு பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, மத்திய அரசிடம் 2.5 கோடி தடுப்பு மருந்துகள் பெறப்பட்டு, தமிழக மக்களுக்கு வழங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டையில் அம்மா மினி கிளினிக்கை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும், அதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தடுப்பூசி ஒத்திகை தமிழகத்தில் செயல்படுத்தபட்டுள்ளதாக கூறினார். 

மேலும் மத்திய அரசிடம் 2.5 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்கிய பின்னர், முதலில் 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படும் எனவும், தமிழகத்தில் இரண்டரை கோடி தடுப்பூசிகளை சேமித்து வைக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.