சென்னை பெருநகர போக்குவரத்து காவல் , திருவான்மியூர் , கிழக்கு கடற்கரை சாலை , மார்க்கெட் பகுதி சாலையை தத்தெடுக்கும் நிகழ்ச்சியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்து , காவல் சிறார் மன்ற சிறுவர்களுக்கு தலைக்கவசம் வழங்கியும் , மாநகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு தொகுப்புகள் வழங்கி , விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டார் (11.12.2020).
J - 6 திருவான்மியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவான்மியூர் மாநகர பேருந்து டிப்போ முதல் மேட்டு தெரு வரையுள்ள கிழக்கு கடற்கரை சாலையை சீராக்கவும் , வாகன ஓட்டிகள் சீராக செல்லவும் புதிய நவீன வழிவகைகளுடன் சென்னை போக்குவரத்து காவல்துறை தத்தெடுக்கும் நிகழ்ச்சியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால் , இ.கா.ப அவர்கள் இன்று ( 11.12.2020 ) மாலை துவக்கி வைத்தார் . பின்னர் , இச்சாலையை சீர்படுத்தி , இங்குள்ள மார்க்கெட் சுற்றியுள்ள பகுதிகளை , சீரான போக்குவரத்துக்கு வழிவகுக்கும் வகையில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் ஏற்பாடு செய்து மக்களுக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்கும் என காவல் ஆணையாளர் அவர்கள் தெரிவித்தார் .
மேலும் , இந்நிகழ்ச்சியின்போது , கீழ்க்கண்டநலத்திட்ட உதவிகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்கள் .
• திருவான்மியூர் பகுதி மாநகராட்சி ஊழியர்கள் , தூய்மை பணியாளர்கள் மற்றும் காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பு தொகுப்புகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால் , இ.கா.ப. , அவர்கள் வழங்கினார் .
-
• உதவும் கரங்கள் அமைப்பில் இருந்து வரும் குழந்தைகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார் .
• காவல் சிறார் மன்றத்தைச் சேர்ந்த 50 இளைஞர்களுக்கு தலைக்கவசம் வழங்கி , அறிவுரைகள் வழங்கினார் .
• மாற்றுத் திறனாளிகளுக்கு காய்கறிதொகுப்புகள் வழங்கினார் .
• போக்குவரத்து மற்றும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் புதிய பிரச்சார ஊர்தியை , காவல் ஆணையாளர் அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்தார் .
• தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகட்டை காவல் ஆணையாளர் அவர்கள் வெளியிட்டு , குறும்படத்தை திரையிட்டு காண்பித்து , பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது . மேலும் , விழிப்புணர்வு குறும்படத்தை தயாரித்த குழுவினருக்கு நினைவுப்பரிசினை காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கினார்கள்
இந்நிகழ்ச்சியில் , சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் ( போக்குவரத்து ) மருத்துவர் என் கண்ணன் , இ.கா.ப . , இணை ஆணையாளர்கள் திருமதி.எஸ்.லஷ்மி , இ.கா.ப. , திரு.எம்.பாண்டியன் , இ.கா.ப. , ( போக்குவரத்து / வடக்கு ) , துணை ஆணையாளர்கள் திரு.வி.விக்ரமன் , இ.கா.ப . , ( அடையார் ) , திரு.என்.குமார் , ( போக்குவரத்து / தெற்கு ) , காவல் அதிகாரிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்